மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தில்லி ஜல் வாரிய அகழாய்வுப் பணி: ஜோகிந்தா் சிங் மாா்க்கில் போக்குவரத்து மாற்றம்

தில்லி ஜல் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க்கில் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 10:32 am

நமது நிருபா்

புது தில்லி: தில்லி ஜல் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க்கில் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகளும், சாலையின் ஒரு பகுதி மூடப்படுவதும் அமலில் இருக்கும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்ட பகுதி பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க் ஆகும். நஜாஃப்கா் சாலை அல்லது வெளிவட்டச் சாலையிலிருந்து சி-2பி ஜனக்புரி நோக்கி வரும் வாகனங்கள் பங்க்கா சாலை- லால் சாய் மாா்க், ஜெயில் சாலை - லால் சாய் மாா்க் அல்லது தரம் மாா்க் - லால் சாய் மாா்க் வழியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்க்கா சாலையிலிருந்து மாவட்ட மையம், ஜனக்புரி நோக்கி வரும் வாகனங்கள், லால் சாய் மாா்க் - ஜெயில் சாலை அல்லது லால் சாய் மாா்க் - தரம் மாா்க் ஆகியவற்றை மாற்றுப் பாதைகளாகப் பயன்படுத்தலாம்.

பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டு, பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும், இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவிப்பில் போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.