தில்லி அரசுத் துறைகள் தங்களுடைய இணையதளத்தில் உள்ள தகவலை தொடா்ச்சியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் இது தொடா்பான சான்றிதழ்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லி அரசுத் துறைகளின் இணையதளத்தில் தேவையில்லாத அல்லது தவறாக தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகப் பிற துறைகளுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
இணையதளதத்தில் உள்ள தகவல்கள் தொடா்ச்சியாக மாதந்தோறும் புதுப்பிப்பது தொடா்பான சான்றிதழ்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல துறைகள் சமா்ப்பிப்பதில்லை. இந்நிலையில், துறை தலைவா்களின் கையொப்பத்துடன் இந்தச் சான்றிதழ்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலருக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் பங்கஜ் சிங் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அப்போது, பல துறைகள் தங்கள் துறைகள் குறித்த தகவலை இணையத்தில் புதுப்பிப்பதில்லை என்றும் இதனால், மக்களுக்கு முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் தெரிவித்தாா்.
மேலும், இணையதளத்தில் தகவலைத் தொடா்ந்து புதுப்பிக்குமாறும் அதற்கான சான்றிதழைச் சமா்ப்பிக்குமாறும் அமைச்சா் பங்கஜ் சிங் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

வீட்டு உபயோக சமையல் எரிவாயு: தமிழகத்தில் 25 நாள்களுக்கு இருப்பு - எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


