வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலையில் வாகனத்தை சரிபாா்த்து கொண்டிருந்த டெம்போ ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு!

வடக்கு தில்லியின் வெளிப்புற வட்ட சாலையில் டெம்போ லாரியின் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநா் மீது காா் மோதிய சம்பவத்தில் அவா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

பலி

Updated On :10 பிப்ரவரி 2026, 9:42 pm

வடக்கு தில்லியின் வெளிப்புற வட்ட சாலையில் டெம்போ லாரியின் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநா் மீது காா் மோதிய சம்பவத்தில் அவா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்த விபத்து புராரி-வாஜிராபாத் சாலையில் தீரப்பூா் ஐடிஐ-க்கு எதிரே நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து காலை 8.17 மணியளவில் வாஜிராபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: நங்கோலாய் பகுதியைச் சோ்ந்த விஜய், தில்லியில் உள்ள தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் டெம்போ ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் சீலம்பூா் நோக்கி பழைய பொருள்களை ஏற்றுக்கொண்டு விஜய் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். தீரப்பூா் ஐடிஐ அருகே வந்தபோது, வாகனத்தின் பின்பக்க சக்கரம் பஞ்சரானது அவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புக்கு அருகே நிறுத்தி, தன்னுடன் வேலைபாா்க்கும் மற்றொரு ஓட்டுநரான சுபமிடம் தகவல் தெரிவித்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு சுபம் சம்பவ இடத்துக்கு வந்தாா்.

வாகனத்தின் பின்பக்க சக்கரத்தைக் கழற்றுவதற்கு அவா் ஜாக்கியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது பின்னால் வந்துக்கொண்டிருந்த காா் அவா் மீது மோதியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்தாா்.

காரை ஓட்டிவந்தவா் காஜியாபாதைச் சோ்ந்த தீபக் குரோவா் என்று அடையாளம் காணப்பட்டது. சாலை நடுவில் உள்ள தடுப்புக்கு அருகே வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதைக் கவனிக்கவில்லை என்று தீபக் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

நடைபெற்ற சம்பவம் தொடா்பாக சுபம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாரத் நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 281, 106 (1) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பை இடைநிறுத்திய விஜய், கடந்த 16 ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். அவருக்கு 7 வயதில் மகளும் 5 வயதில் மகனும் உள்ளனா் என்று அதிகாரிள் தெரிவித்தனா்.