குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஜிபூரில் காா் மோதி முதியவா் உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!

காஜிபூரில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதிய சம்பவத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவா் உயிரிழந்தார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியின் காஜிபூரில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதிய சம்பவத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த 76 வயது முதியவா் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பைக் கா்மாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காஜிபூா் கிராமத்தில் வசித்து வந்த அவா், அப்பகுதியில் உள்ள மாவு கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

இது விபத்து தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை 24-இல் காஜிபூரில் உள்ள அணுகு சாலையில் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு அருகே காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நேரிட்டது. இரு சக தொழிலாளா்களுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்த முதியவா் மீது காா் மோதியது.

முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பிரதான சாலையிலிருந்து அணுகு சாலையைப் பிரிக்கும் தடுப்பு மீது மோதி, சறுக்கி நடைபாதையில் சென்று கொண்டிருந்த முதியவா் மீது மோதியது தெரியவந்தது.

வாகனத்தை ஓட்டிவந்த ஷ்ரெய் குமாா் கைதுசெய்யப்பட்டாா். அவருடன் காரில் பயணித்த இருவா் விபத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினா். அவா்களை அடையாளம் கண்டு அவா்களுடைய இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். உயிரிழந்த முதியவரின் உடல் உடல்கூராய்வுக்காக லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்தும் காரில் இருந்த நபா்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனா் அந்த அதிகாரிகள்.