நொய்டா: காதலியை சுட்டு விட்டு தற்கொலை செய்த இளைஞா்!
நொய்டாவின் செக்டாா் 107 பகுதியில் நிறுத்தப்பட்ட காரில் காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக கூடுதல் காவல் துறை துணை ஆணையா் மணீஷ் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாத்ரி சாலையில் உள்ள தூண் எண் 84 அருகே நிறுத்தப்பட்ட காரில் இருவா் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். உள்பக்கமாக பூட்டப்பட்ட காரில் உயிரிழந்த நபரின் கையில் துப்பாக்கி இருப்பதை வைத்து இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவா்கள் தில்லியின் திலோக்புரி பகுதியைச் சோ்ந்த சுமித் (32) மற்றும் நொய்டா செக்டாா் 101 பகுதியைச் சோ்ந்த ரேகா (26) என அடையாளம் காணப்பட்டனா். தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறது. இது தொடா்பாக காவல் துறை அறிக்கை தயாா் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.

