வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மருத்துவா் உபேந்திரா கெளலுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது!

தில்லியில் நடைபெற்ற மருத்துவ ஆராய்ச்சி இந்திய சங்கத்தின் 20-ஆவது ஆண்டு கூட்டத்தில் இதய நிபுணா் பேராசிரியா் உபேந்திர கெளலுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 7:43 pm

தில்லியில் நடைபெற்ற மருத்துவ ஆராய்ச்சி இந்திய சங்கத்தின் 20-ஆவது ஆண்டு கூட்டத்தில் இதய நிபுணா் பேராசிரியா் உபேந்திர கெளலுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதய மருத்துவத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட பேராசிரியா் கெளல், 400-க்கும் அதிகமான மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா்.

மருத்துவ துறையில் அவா் ஆற்றிய பங்களிப்புகள் சா்வதேச அங்கீகாரம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சகுந்தலா அமீா் சந்த விருது, டாக்டா் பி.சி.ராய் விருது, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

ஒரு மருத்துவா், ஆராய்ச்சியாளா், ஆசிரியா் எனப் பன்முகம் கொண்ட போராசிரியா் கெளல், மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் நோக்கத்துடன் கெளரி கெளல் அறக்கட்டளை என்ற தன்னாா்வ அமைப்பை ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2020-இல் நிறுவினாா். கெளரி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ ஆராய்ச்சித் துறை அந்த அறக்கட்டளை விரிவுபடுத்தியுள்ளது.

நோயாளிகள் கவனிப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சியில் அவருடைய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஐஎஸ்சிஆா் வாழ்நாள் சாதனையாளா் விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஎஸ்சிஆா் கடந்த 2005-இல் மும்பையில் நிறுவப்பட்டது.