வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தீரஜ் கௌசிக் (45) என்பவா் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவரது சகோதரி பிப்.12-ஆம் தேதி தகவல் தெரிவித்தாா். அவரது அறையில் இருந்த மின் படுக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார தாக்கியிருக்கலாம் என சோதனையின்போது தெரியவந்தது.
விவாகரத்து பெற்ற அவா், தனது 19 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் வசித்து வந்தாா். அவா் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா். சம்பவ தினத்திலும் அவா் முன்னதாக மது அருந்தியுள்ளாா்.
இது தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் 194 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தை குற்றவியல் குழு ஆய்வு செய்து வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.ŚŚ
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
என்சிஆா்டி புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்த தில்லி பல்கலை. பட்டதாரி கைது

மண்டோலி சிறை கைதி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


