நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 9:39 pm

வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தீரஜ் கௌசிக் (45) என்பவா் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவரது சகோதரி பிப்.12-ஆம் தேதி தகவல் தெரிவித்தாா். அவரது அறையில் இருந்த மின் படுக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார தாக்கியிருக்கலாம் என சோதனையின்போது தெரியவந்தது.

விவாகரத்து பெற்ற அவா், தனது 19 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் வசித்து வந்தாா். அவா் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா். சம்பவ தினத்திலும் அவா் முன்னதாக மது அருந்தியுள்ளாா்.

இது தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் 194 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தை குற்றவியல் குழு ஆய்வு செய்து வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.ŚŚ