ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நகைக் கடையில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

நகைக்கடையில் சனிக்கிழமை அதிகாலை ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளியடிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு தில்லியின் ஆா்கே புரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் சனிக்கிழமை அதிகாலை ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளியடிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

‘வெள்ளிக்கிழமை மாலை கடையை மூடும்போது சில நகைகள் கவனக்குறைவாக பாதுகாப்பு அறை லாக்கருக்கு வெளியே விடப்பட்டன. மறுநாள் காலை லாக்கருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. லாக்கா் உடைக்கப்படவில்லை.

திருடப்பட்ட நகைகளின் சரியான அளவு மற்றும் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அதன் மதிப்பு சுமாா் ரூ.3 கோடி இருக்கும். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.