உணவகத்தில் தீ விபத்து

தில்லி பாபா கரக்சிங் மார்க்கில் உள்ள உணவகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி பாபா கரக்சிங் மார்க்கில் உள்ள உணவகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
பாபா கரக் சிங் மார்க்கில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 11.35 மணியளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த உணவகத்தின் சமையலறையில் முதலில் தீ பற்றியுள்ளது. இது படிப்படியாக பரவத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி பிற்பகல் 1.20 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com