மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டமானது, குறிப்பிட்ட மதத்தினரை அடையாளப்படுத்தி தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது சமூகத்தில் பிரிவினையையும், குழப்பத்தையும் ஏற்படுத்த வழிவகுக்கும். மேலும், மத உரிமைகளுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை செல்லாது என உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.