தில்லி அரசு சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை தில்லி சத்தரசால் விளையாட்டு மைதானத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசுகிறார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சர்கள், எம்எம்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், தில்லி அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தையொட்டி, சட்டப்பேரவை கட்டடம் முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதேபோல, தில்லியில் உள்ள மாநகராட்சிகள் அனைத்திலும் சுதந்திர தின விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.