மேற்கு தில்லி திலக் நகரில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் தீயில் எரிந்து நாசமடைந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.