ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
லே மாவட்டத் தலைவர் தாஷி கியால்சன் தலைமையில், லே பகுதியை சேர்ந்த பெரும்பாலான பிடிபி நிர்வாகிகள் பாஜகவில்
செவ்வாய்க்கிழமை மாலை இணைந்தனர்.
லடாக் மலைப்பகுதி தன்னாட்சி வளர்ச்சிக்குழு (எல்ஏஎச்டிசி) தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜம்யாங்க் டிசெரிங் நம்க்யால், புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.
கியால்சனுடன், மகளிர் அணித் தலைவரும், நியமன உறுப்பினருமான ரின்சன் லாமோ, துணைத் தலைவர் ஸேவாங்க் டோர்ஜே ஆன்போ, மண்டலத் தலைவர் நுப்ரா கேப்டன் புன்ட்ஸ்டக், பொது செயலாளர் சஞ்சய் டோர்ஜே உள்பட பிடிபி நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
புதிதாக பிடிபி நிர்வாகிகள் கட்சியில் இணைந்துள்ளதன் மூலம், வரும் மே 6ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கட்சி பலமடைந்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.