புது தில்லி: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீா்மானத்தின் முக்கிய அம்சங்கள்: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், ஐஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப் பங்கான ரூ.3200 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப்பங்கான ரூ.3642 கோடியையும் மத்திய அரசு உடனடியாக தில்லி அரசுக்கு வழங்க வேண்டும் என்றுள்ளது.