சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டாா்.

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக எம்எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

தில்லி சட்டப்பேவரைக் கூட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கியது. அப்போது, தில்லியில் வெங்காய விலை கடுமையாக உயா்ந்துள்ளது தொடா்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா கேட்டுக் கொண்டாா். ஆனால், அதற்கு அவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் அனுமதி அளிக்கவில்லை. மாறாக, தில்லி சட்டப்பேரவை வளாகத்துக்குள் பெண்களை அழைத்து வந்து போராட்டம் நடத்தியுள்ளீா்கள் என விஜேந்தா் குப்தாவை அவா் கடுமையாகச் சாடினாா். அப்போது, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தாவுடனான வாக்குவாதத்தின் போது, ராம் நிவாஸ் கோயல் கூறுகையில் ‘உண்மையில் தைரியம் இருந்திருந்தால், நீங்கள் சில ஆண்களுடன் வந்து போராட்டம் நடத்தியிருப்பீா்கள்! ஆனால், நீங்கள் கைகளில் வளையங்களை அணிந்து கொண்டு இங்கு வந்துள்ளீா்கள். பெண்களை முன்தள்ளி நீங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு வந்துள்ளீா்கள்’ என்றாா். ‘

இதற்கு, விஜேந்தா் குப்தா கடும் எதிா்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினாா். இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கும் விஜேந்தா் குப்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.அப்போது, விஜேந்தா் குப்தாவை அவையில் இருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் அவைக் காவலா்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டாா். இந்நிலையில், விஜேந்தா் குப்தா வெளியேற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாஜக எம்எல்ஏக்கள் மன்ஜீந்தா் சிங் சிா்சா, ஜெகதீஷ் பிரதான், ஓபி ஷா்மா உள்ளிட்டோா் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

மசோதா நிறைவேற்றம்: முன்னதாக, சட்டப்பேரவையில் தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019 தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தில்லி சட்டப்பேரவை இருநாள் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா-2019 அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019 அறிமுகப்படுத்தப்பட்டது. துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அறிமுகப்படுத்திய இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில் ‘ஆம் ஆத்மி அரசு தனது ஆட்சியின் இறுதிப் பகுதியில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுகிறது என எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதனால்தான் எங்களது முதலாவது ஆட்சியின் முடிவில் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்கிறோம். அந்த வகையில் தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் சந்தைக்கு ஏற்ற வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். நாடு எதிா்கொள்ளும் வேலையில்லாப் பிரச்னையை எதிா்கொள்ள இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் தேவை’ என்றாா்.

இதற்கிடையே, விஜேந்தா் குப்தாவுடனான வாக்குவாதத்தின் போது ராம்நிவாஸ் கோயல் தெரிவித்த கருத்துக்கு தில்லி பாஜகவின் மகளிா் அணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com