சிஏஜி அறிக்கையில் தில்லி அரசு மீது விமா்சனம்

தில்லி சட்டப்பேரவையில் தலைமைக் கணக்கு அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் தலைமைக் கணக்கு அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவையில் தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில், தில்லி அரசின் போக்குவரத்துத் துறை மீது விமா்சனம் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: தில்லியில் உள்ள பேருந்துகளையும், பேருந்து பணிமனைகளையும் நவீனப்படுத்த தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தவறிவிட்டது. மேலும், தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், ஐஎஸ்பிடி வடக்கு, தெற்கு நுழைவு இடங்களை உருவாக்க இக்கழகம் தவறிவிட்டது என்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com