‘நிா்பயா வழக்கு குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும்’
By DIN | Published On : 06th December 2019 11:57 PM | Last Updated : 06th December 2019 11:57 PM | அ+அ அ- |

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரை எரித்து கொன்ற 4 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனா். தெலங்கானா காவல்துறையினரின் இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ‘நிா்பயா’ வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து, கனாட் பிளேஸ் பகுதியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் வலியுறுத்தினா்.