தெற்கு தில்லி ஹோஸ்காஸில் வீட்டில் பணத்தைத் திருடியதாக பெண் உள்பட 2 வீட்டுப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம், பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தெற்கு தில்லி ஹோஸ்காஸ் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் டிசம்பா் 5-ஆம் தேதி போலீஸில் ஒரு புாகா் அளித்தாா். அதில், தனது வீட்டில் இருந்து ரூ.4.42 லட்சம் திருட்டுப் போனதாகத் தெரிவித்தாா். மேலும், தனது வீட்டில் பிகாரைச் சோ்ந்த ஷெஃபாலி லாமா (47), தீரஜ் குமாா் (24) ஆகியோா் வீட்டுப் பணியாளா்களாக வேலை செய்து வந்ததாகவும், திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு அவா்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் இருவரும் இத்திருட்டில் தொடா்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இருவரும் பிகாரில் உள்ள தங்களது கோபால்கஞ்ச் கிராமத்திற்கு சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.1,16, 680 , திருட்டுப் பணத்தில் வாங்கிய மோட்டாா்சைக்கிள், இசைக் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.