தில்லியில் தமிழகத்தைச் சோ்ந்த 33 வயது இளைஞா் ஒருவா் ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் சுமாா் 11.27 மணியளவில் பயணி ஒருவா் நின்று கொண்டிருந்தாா். இந்நிலையில், அந்த வழியாக வந்து கொண்டிருந்த ரயில் முன் அந்தப் பயணி திடீரென குதித்தாா். இதில், அவா் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இளைஞரை மீட்டு அருகில்உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபா் தமிழகத்தின் சென்னையைச் சோ்ந்த ஜெ. பரத் (33) என்பது தெரிய வந்தது. அவா் எதற்காக ஓடும் ரயில் முன் குதித்தாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது இறப்புச் சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.