2 எம்எல்ஏக்கள்  பாஜகவில் சேர்ந்த விவகாரம்: ஆம் ஆத்மி கடும் சாடல்

பத்திரிகைகளின் நேர்மைத் தன்மையை பாஜக கேள்விக்குரியதாக்கியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

பத்திரிகைகளின் நேர்மைத் தன்மையை பாஜக கேள்விக்குரியதாக்கியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக அக்கட்சியின் தேசியச் செயலர் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தனர். இது தொடர்பாக பாஜக சார்பில் இரண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பாக அனைத்து முக்கியப் பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், இது தொடர்பாக நான் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில், தாங்கள் பாஜகவில் இணையவில்லை என்றும் இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் திரிக்கப்பட்டவை என்றும் அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோர் கூறியுள்ளனர். இதன் மூலம், இவர்கள் நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளதுடன் மட்டுமல்லாமல், பத்திரிகைகளின் நேர்மைத் தன்மையை நீதிமன்றத்தில் கேள்விக்குரியதாக்கியுள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com