புதுவை விவகாரத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளார்.
புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச திமன்றத்தில் கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி சுட்டுரையில் பதிவிட்டிருப்பதை சுட்டிக் காட்டி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், வாழ்த்துகள் நாராயணசாமி. ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. தில்லி, புதுவை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இதன்மூலம் தீர்க்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.