வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

மேற்கு தில்லி துவாரகா பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச்


மேற்கு தில்லி துவாரகா பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக பாபா ஹரிதாஸ் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அப்போது  கொள்ளை தொடர்பாக பிரவீண் (19), தீவன் (24), ராகுல் (22), தரம்பிர் (19) ஆகியோர் கடந்த ஜூலை 6-இல் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் குறிப்பிட்ட பகுதியை இலக்காக வைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் கொள்ளையிடும் போது எந்த இடர்பாடும் இருக்காது என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பிறகுதான் கொளளையில் ஈடுபடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
அவர்களிடம் இருந்து ஒரு டிவி, ஒரு இன்வர்ட்டார், நான்கு கார்களுக்கான பேட்டரிகள், ஒரு ரிக்ஷா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது கூட்டாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com