மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியில் மூன்று மாடிக் கட்டடத்தின் பால்கனி பகுதி செவ்வாய்க்கிழமை காலை திடீரென

வடக்கு தில்லியில் மூன்று மாடிக் கட்டடத்தின் பால்கனி பகுதி செவ்வாய்க்கிழமை காலை திடீரென சரிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லி தீயணைப்புத் துறைக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.25 மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தில்லி சதர் பஜாரில் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மூன்று மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ஓர் அறையின் பால்கனி இடிந்து விழுந்தது தெரிய வந்தது.  இதையடுத்து, காலை 6.55 மணிக்குள் இடிபாடுகள் அகற்றப்பட்டன. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றார் அந்த தீயணைப்பு அதிகாரி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com