தில்லியில் தேர்தல் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 12) மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே இயக்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎம்ஆர்சி அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லியில் தேர்தல் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்குத் தொடங்கும்.
அப்போதுதான், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியும். அனைத்து வழித்தடங்களிலும் காலை 6 மணி வரை 30 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
காலை 6 மணிக்குப் பிறகு மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணைப்படி நாள் முழுவதும் ஓடும். துவாரகா செக்டார் 21-இல் இருந்து வைஷாலி நோக்கிச் செல்லும் ரயில்கள் காலை 4.30 மணிக்கு சேவையைத் தொடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.