தேர்தல் நாளில் மெட்ரோ ரயில் சேவை முன்கூட்டியே தொடக்கம்: டிஎம்ஆர்சி

தில்லியில் தேர்தல் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 12) மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே

தில்லியில் தேர்தல் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 12) மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே இயக்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக டிஎம்ஆர்சி அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: 
தில்லியில் தேர்தல் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்குத் தொடங்கும். 
அப்போதுதான், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியும். அனைத்து வழித்தடங்களிலும் காலை 6 மணி வரை 30 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 
காலை 6 மணிக்குப் பிறகு மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணைப்படி நாள் முழுவதும் ஓடும். துவாரகா செக்டார் 21-இல் இருந்து வைஷாலி நோக்கிச் செல்லும் ரயில்கள் காலை 4.30 மணிக்கு சேவையைத் தொடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com