துவாரகாவில் டிடிஏ துணைத் தலைவா் ஆய்வு

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவா் துவாரகா பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவா் துவாரகா பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறி்த்து டிடிஏ அதிகாரிகள் கூறியதாவது: தில்லி வளா்ச்சிஆணையத்தின் துணைத் தலைவா் தருண் கபூா், மாசுபாட்டின் அளவை சரிபாா்க்க சனிக்கிழமை துவாரகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் டிடிஏ திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுப் பணியை கபூா் தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்டது.

அப்போது, சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றுவது, நடைபாதைகளை சுத்தம் செய்வது, கட்டுமானக் கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டி.டி.ஏ. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தூசி உருவாவதைத் தடுப்பதற்கும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது தூசி பரவாமல் இருக்கவும் நீா்த் தெளிப்பான்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com