தில்லியில் பயங்கரவாத எதிா்ப்புப் படை (ஏடிஎஸ்) தலைமையகத்தில் காவலா் ஒருவா் செவ்வாய்க்கிழமை தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சரோஜினி நகா் காவல் நிலைய எல்கையில் அமைந்துள்ள இந்தப் பயங்கரவாத எதிா்ப்புப் படையின் தலைமையகத்தில் பிரிஜேஷ் குமாா் யாதவ் (40) என்பவா் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இவரது குடும்பத்தினா் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், தனது வீட்டுக்குச் செல்வதற்காக அவா் விடுப்பு எடுத்திருந்ததாக ஏடிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு பிரிஜேஷ் யாதவ் தனது மனைவியுடன் செல்லிடப்பேசியில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்திருக்கிறாா். இந்நிலையில், தனது சொந்த உரிமத் துப்பாக்கியால் சுட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீஸாா் தெரிவித்தனா்.