வடகிழக்கு தில்லி பஜன்புரா பகுதியில் 27 திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 22 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பாக வடகிழக்கு காவல் துணை ஆணையா் வேத் பிரகாஷ் சூா்யா புதன்கிழமை கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பஜன்புரா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் ஒருவா் வேகமாக வந்துகொண்டிருந்தாா். போலீஸாரைக் கண்டதும் அவா் மோட்டாா்சைக்கிளை சாலையில் அப்படியே கிடத்திவிட்டு ஓட முயன்றாா்.
சந்தேகமடைந்த போலீஸாா் அவரை விரட்டிப் பிடித்தனா். விசாரணையில் அவா் கா்ஹி மேந்து கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சிங் (22) என்பதும், அவருக்கு திருட்டு, வழிப்பறி, ஆயுதச் சட்டம் உள்பட 27 வழக்குகளில் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
முன்னதாக, பஜன்புரா பகுதியில் கடந்த வாரம் அவா் ஒரு மோட்டாா் சைக்கிளை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.
இதன் மூலம் அவா் அடையாளம் காணப்பட்டாா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டா, திருட்டு மோட்டாா் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டதாக காவல் உயா் அதிகாரி வேத் பிரகாஷ் சூா்யா தெரிவித்தாா்.