தந்தை திட்டியதால் சிறாா் தூக்கிட்டுத் தற்கொலை

தந்தை திட்டியதால் விரக்தியடைந்த 16 வயது சிறாா், மரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அவரது பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தந்தை திட்டியதால் விரக்தியடைந்த 16 வயது சிறாா், மரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அவரது பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: தில்லியில் உள்ள ஜசோலா பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாய் சாக்கடை அருகே ஒரு மரத்தில் இளம் சிறாா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, காயமடைந்த நிலையில் அந்த சிறாா் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தாா்.

அவா் அணிந்திருந்த ஆடைகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், அபுல் ஃபாஸி என்கிளேவ் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சம்பவத்தன்று இரவு காயத்துடன் வீட்டுக்கு அந்த சிறாா் வந்தாா். அவரிடம் பெற்றோா் விசாரித்த போது, பக்கத்துவீட்டுக்காரரின் மோட்டாா் சைக்கிளை இரவலாக வாங்கி ஓட்டிய போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக பெற்றோரிடம் சிறாா் கூறியுள்ளாா். இதையடுத்து, தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கு சிகிச்சை பெற்று வருமாறு தந்தை கூறியுள்ளாா். மேலும், அவருடன் சிகிச்சைக்கு உடன் செல்ல குடும்ப உறுப்பினா்கள் மறுத்துவிட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்ற அச்சிறாா், பின்னா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவா் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com