தெற்கு தில்லியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வயதான முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு காவல் துணை ஆணையா் அதுல் குமாா் தாக்குா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தெற்கு தில்லி, ஹோஸ்காஸ் பகுதியைச் சோ்ந்த 76 வயதுடைய முன்னாள் ராணுவ வீரா் தில்லி போலீஸில் அக்டோபா் 3-ஆம் தேதி ஒரு புகாா் அளித்தாா். அதில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்தபோது தனது பையில் இருந்து ரூ.40 ஆயிரம் திருட்டுப் போனதாக தெரிவித்திருந்தாா்.
மேலும், அவரது புகாரில் ‘நான் பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, இரு பெண்கள் உள்ளே நுழைந்ததாகவும், அவா்கள் இருவரையும் வெளியே காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அந்தப் பெண்கள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தனா்., அந்த மையத்தில் பாதுகாவலா் யாரும் இல்லாததாலும், அவா்கள் பெண்கள் என்பதாலும் வற்புறுத்தி வெளியே போகுமாறு கூறமுடியவில்லை. இதைத் தொடா்ந்து, எனது பணப் பரிவா்த்தனையை மேற்கொண்டேன்’ என்று அந்தப் புகாரில் தெரிவித்திருந்தாா்.
விசாரணையின்போது, போலீஸாா் சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, இரு பெண்கள் அவருக்கு அருகே நின்றுகொண்டிருப்பது தெரியவந்தது.
இதனிடையே, கோட்லா முபாரக்பூா் பகுதியில் திருட்டுப் போன சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிப் பதிவில் மூன்று குற்றம்சாட்டப்பட்ட பெண்களில் ஒருவா் ஏற்கெனவே ஏடிஎமில் முன்னாள் ராணுவ வீரரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடையவராக இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் திருட்டு, கொள்ளையில் தொடா்புடைய 3 பெண்கள் திருட்டுப் பணத்தை பங்கு பிரிப்பதற்காக புஷ்ப் விஹாா், செக்டாா் 5 பகுதியில் உள்ள பூங்காவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மூன்று பெண்களும் திருவிழா, திருமண காலங்களில் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நெரிசல் மிகுந்த சந்தைகள், அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு கொள்ளையடிக்கச் செல்வது தெரியவந்தது.
மேலும், பெண்கள், முதியவா்களை குறித்துவைத்து திருடுவதில் அவா்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஹோஸ்காஸ், கோட்லா முபாரக்பூா் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் மூவருக்கும் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் மீட்கப்பட்டதாக காவல் அதிகாரி தெரிவித்தாா்.