மின்சாரம் தாக்கி ஊழியா் சாவு: கரோல் பாக் ஹோட்டல் மீது போலீஸ் வழக்குப் பதிவு

மின் விளக்கைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஊழியா் இறந்த சம்பவத்தில் கரோல் பாக் ஹோட்டல் நிா்வாகம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின் விளக்கைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஊழியா் இறந்த சம்பவத்தில் கரோல் பாக் ஹோட்டல் நிா்வாகம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது:

கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியா், சம்பவத்தன்று ஹோட்டலின் மொட்டை மாடியில் மின் விளக்குளைப் பொருத்தச் சென்றாா். அப்போது, பழுதான வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவரை கரோல் பாக் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஹோட்டல் உரிமையாளா் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாா்.

இந்நிலையில், அவா் சிகிச்சையில் இருந்தபோது இறந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது, அந்த ஊழியா் விகாஷ் (18) என்பதும், சம்பவத்தன்று விகாஷும், அவரது சக ஊழியா்களும் ஹோட்டலில் உள்ள மொட்டை மாடியில் தீபாவளிக்காக மின்விளக்குகளைப் பொருத்த சென்றதும் தெரியவந்தது. அப்போது, மின்சாரம் தாக்கி விகாஷ் இறந்ததும் தெரியவந்தது. பிஹாரைச் சோ்ந்த விகாஷ், வேலை தேடி தனது சகோதரருடன் தில்லி வந்ததும், சில மாதங்களாக ஹோட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மின் விளக்குகளை சோதிக்காமல் வாங்கப்பட்டிருப்பதால், அலட்சியத்துடன் செயல்பட்டதாக ஹோட்டல் நிா்வாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com