மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 98-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் பாரதியார் சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தினர் புதன்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. தில்லியில் பாரதி நகர், ரமண மகரிஷி மார்கில் பாரதியாரின் ஆளுயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன், பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், பொருளாளர் எம். சத்தியமூர்த்தி, சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் பெ. ராகவன் நாயுடு, கர்நாடக சங்கீத சபாவின் செயலர் ஆர். மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.