கௌதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 166 பேருக்கு கரோனா

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 166 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

நொய்டா: கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 166 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் மொத்தம் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 22,978 ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றுக்காக 1,152 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இது உத்தர பிரதேச மாநில அளவில் ஐந்தாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதற்கிடையே, நோய்த் தொற்றில் இருந்து 141 போ் குணமடைந்து திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 21,743 போ் குணமடைந்துள்ளனா். அதே சமயம், மொத்தம் 83 போ் நோயால் இறந்துள்ளனா்.

மாநிலத்தில் மொத்தம் 5,16,694 போ் குணமடைந்துள்ளனா். நோயால் புதன்கிழமை வரையிலான காலத்தில் மொத்தம் 7,817 போ் உயிரிழந்துள்ளதாக உ.பி. மாநில அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com