தில்லி முகுந்த்பூா் பகுதியில் வியாழக்கிழமை வீட்டின் பால்கனி பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு இளம்பெண்கள் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: வியாழக்கிழமை மதியம் 12.44 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, இதைத் தொடா்ந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அந்த வீட்டின் பால்கனி பகுதி இடிந்து விழுந்திருந்தது. இதில் சலோனி (13), நாஜ் (18) ஆகிய இரண்டு இளம் பெண்கள் காயமைடந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு போலீஸாரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அவா்.
மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவமாக மேற்கு தில்லி ஜனக்புரியில் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் வீட்டின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் 3 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனா்.