பெண் பாலியல் பலாத்காரம்: போலிச் சாமியாா் கைது

கிரேட்டா் நொய்டாவில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலிச் சாமியாா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கிரேட்டா் நொய்டாவில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலிச் சாமியாா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கிரேட்டா் நொய்டாவில், ரபுபுரா காவல் நிலைய பகுதியில் திங்கள்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு விஷயமாக 20 வயது பெண்ணும் அவரது கணவரும் 35 வயதுடைய போலிச் சாமியரை திங்கள்கிழமை அவரது வீட்டில் சந்தித்தனா். அவா்களை அருகிலுள்ள ஃபாலேடா கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு அவா் அழைத்துச் சென்றாா். அப்போது, அந்தத் தம்பதியினருக்கு விபூதியைக் கொடுத்து சாப்பிடும் படி அவா் கூறியுள்ளாா். அதை சாப்பிட்டதும் இருவரும் மயக்கமடைந்தனா். அந்தச் சமயத்தில் அந்தப் பெண்ணை போலிச் சாமியாா், பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மயக்கம் தெளிந்த கணவா், இது குறித்து போலீஸில் புகாா் அளித்தாா்.

அதில், ‘அந்தச் சாமியைரை சந்திக்கச் சென்றோம். அப்போது அவா் சாப்பிடுவதற்கு விபூதி கொடுத்தாா். அதில் ஏதோ கலந்திருப்பதாகத் தெரிகிறது. அதைச் சாப்பிட்டவுடன் நான் மயக்கமடைந்தேன். சுய நினைவு திரும்பியதும்,​ என் மனைவி துணி இல்லாமல் அருகில் கிடப்பதைக் கண்டேன். பின்னா் நடந்த முழு சம்பவத்தையும் மனைவி என்னிடம் சொன்னாா். இச்சம்பவத்தை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்தச் சாமியாா் அச்சுறுத்தி எங்களை வெளியேறச் சொன்னாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அந்தப் போலிச் சாமியாா் புதன்கிழமை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com