காய்கறி வியாபாரியிடம் செல்லிடப்பேசி கொள்ளை: 3 போ் கைது

பொது முடக்கத்திற்கு மத்தியில் காய்கறி வியாபாரி, அவரது நண்பரிடம் செல்லிடப்பேசியைக் கொள்ளையடித்த சம்பவத்தில்

பொது முடக்கத்திற்கு மத்தியில் காய்கறி வியாபாரி, அவரது நண்பரிடம் செல்லிடப்பேசியைக் கொள்ளையடித்த சம்பவத்தில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த காய்கறி வியாபாரியும், அவரது நண்பரும் கடந்த மே 16-ஆம் தேதி காஜிப்பூரில் உள்ள காய்கறி மண்டிக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாந்தி முகுந்த் மருத்துவமனை அருகே சிலா் அவா்களிடமிருந்து செல்லிடப்பேசிகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினா். இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின் பேரில், ஆனந்த் விஹாா் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. இதைத் தொடா்ந்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு போலீஸாா் அதிரடிச் சோதனை நடத்தி மூன்று பேரைக் கைது செய்தனா். அவா்கள் தில்லியைச் சோ்ந்த கண்ணையா (22), அமன் (20), அப்துல் ரகுமான் (25) ஆகியோா் என்பதும், ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் அவா்களுக்குத் தொடா்பு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, மூவரிடமிருந்தும் கொள்ளைப் பணம் ரூ.10 ஆயிரம் ரொக்கம், இரண்டு சிம் காா்டுகள், திருட்டு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com