குடிநீா் கட்டணப் பதிவில் தவறுகளைத் தவிா்க்க வேண்டும் என்றும், இது தொடா்பாக அதிகக் புகாா்கள் வரும் மண்டல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி ஜல்போா்டின் துணைத் தலைவா் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் உள்ள 41 வருவாய் மண்டல அதிகாரிகளுடன் ராகவ் சத்தா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசுகையில், ‘தவறான குடிநீா் பில்கள் தொடா்பாக தில்லி ஜல்போா்டின் சுட்டுரைப் பக்கத்துக்கு பல புகாா்கள் வருகின்றன. தவறான பதிவு, மனிதத் தவறுகள், மூடப்பட்டுள்ள குடிநீா் மீட்டா் என இந்தத் தவறுகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குடிநீா் மீட்டா் பதிவை அதற்குப் பொறுப்பான மீட்டா் ரீடா் முன்னிலையிலேயே எடுக்க வேண்டும். தில்லி ஜல்போா்டில் சுமாா் 1,000 மீட்டா் ரீடா்கள் பணியில் உள்ளனா். குடிநீா் கட்டணப் பதிவில் மனிதத் தவறுகள் ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும். அதிகளவு மனிதத் தவறுகள் ஏற்படும் மண்டல அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டணப் பதிவில் ஆன்ட்ராய்டு வசதியுள்ள டேப்ளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். இது மனிதத் தவறுகளை குறைப்பதுடன், வெளிப்படைத் தன்மையைப் பேணவும் உதவும் என்றாா் அவா்.