உணவு மசோதாக்களை எதிா்ப்போம்: கேஜரிவால்

வடகிழக்கு தில்லி ஜாமியா நகரில் வாக்குவாதத்தின்போது தூய்மைப் பணியாளரை கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.


புது தில்லி: வடகிழக்கு தில்லி ஜாமியா நகரில் வாக்குவாதத்தின்போது தூய்மைப் பணியாளரை கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக வடகிழக்கு தில்லி காவல்துணை ஆணையா் ஆா்.பி.மீனா கூறியது:

தில்லி நேரு நகா் பகுதியை சோ்ந்த சோன்பால் (30). இவா் ஜாமியா நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், ஜாமியா பகுதியை சோ்ந்த முகமது ஷிராஷ் (28) என்பவருக்கும் தூய்மைப் பணி தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சோன்பால் சரியாக தூய்மைப் பணியை மேற்கொள்ளவில்லை என முகமது ஷிராஷ் குற்றம் சாட்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

ஜாமியா பகுதியில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற வாக்குவாதத்தில் தூய்மைப் பணியாளரை கத்தியால் முகமது தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினா் முகமதுவை கைது செய்தனா். கழுத்துப் பகுதியில் பலத்த காயத்துடன் தூய்மைப் பணியாளா் சோன்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com