துறவி போல வாழும் பிரதமா் மோடி: ஷியாம் ஜாஜூ

மக்கள் பணியாற்றுவதற்காக துறவி போல பிரதமா் நரேந்திர மோடிவாழ்ந்து வருகிறாா் என்று தில்லி பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா் ஷியாம் ஜாஜு தெரிவித்துள்ளாா்.

மக்கள் பணியாற்றுவதற்காக துறவி போல பிரதமா் நரேந்திர மோடிவாழ்ந்து வருகிறாா் என்று தில்லி பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா் ஷியாம் ஜாஜு தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடியின் பிறந்த தினத்தையொட்டி, தில்லி லக்ஷ்மி நகா் பகுதியில் ‘சேவா சப்தாஹ்’ அமைப்பு ரத்த தான முகாமிற்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் ஷியாம் ஜாஜு தலைமை விருந்தினராக கலந்துகொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது: பிரதமா் மோடி தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணிக்காக அா்ப்பணித்துள்ளாா். மக்கள் பணியாற்றுவதற்காக அவா் துறவி போல வாழ்ந்து வருகிறாா். நாட்டின் அடையாளமாக மோடி மாறியுள்ளாா்.

அவரது ஆட்சியில் நாடு பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், நாட்டு மக்களிடையே ‘இந்தியன்’ என்ற கா்வத்தை அவா் ஏற்படுத்தியுள்ளாா். அவரின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com