நோயால் அவதி: மாடியில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தற்கொலை

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து புதன்கிழமை குதித்த 64 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து புதன்கிழமை குதித்த 64 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா செக்டா்- 39 காவல் நிலைய அதிகாரி ஆசாத் சிங் தோமா் கூறியதாவது: பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற 64 வயது முதியவா் செக்டாா் 45-இல் உள்ள அம்ரபாலி சபையா் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் தனது மகனுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் அவா் தனது வீட்டு மாடியில் இருந்து குதித்தாா். இதில் அவா் பலத்த காயமடைந்து இறந்தாா்.

தகவலறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை குறிப்பை வீட்டில் இருந்து போலீஸாா் மீட்டனா். நோயால் அவதியுற்ற வந்த நிலையில், நோய் பாதிப்பு தாள முடியாமல் இந்த விபரீத முடிவை தாம் எடுத்ததாக அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக அவரது மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, உடல்நலப் பிரச்னைகள் காரணமாக தனது தந்தை கவலையில் இருந்ததாகத் தெரிவித்தாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com