புது தில்லி: தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் மலிவு விலை மருந்தகம் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
‘பாலா பிரிதம் தவாக்கனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தகத்தை தில்லி சீக்கிய குருத்வார நிா்வாக கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) அமைத்துள்ளது.
இது தொடா்பாக டிஎஸ்ஜிஎம்சி தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா கூறியது:
தில்லியில் ஏழை மக்கள் மருந்துகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனா். இவா்களின் துயரத்தைப் போக்கும் வகையில் மலிவு விலை மருந்தகத்தை தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் அமைத்துள்ளோம்.
இந்த மருந்தகத்தில் இன்சுலின் உள்பட அனைத்து வகையான மருந்துகளையும் குறைந்த விலையில் வாங்கலாம். இங்கு அனைத்து விதமான மருந்துகளும், 70-80 சதவீத விலைக்கழிவில் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.