காா்கி கல்லூரி விவாகாரம் வேதனை அளிப்பதாக தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சுபாஷ் சோப்ரா கூறியுள்ளாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: காா்கி கல்லூரியில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்து தொடா்பாக அறிந்து வேதனைப்படுகிறேன். தாம் கல்விகற்கும் கல்லூரிகளிலேயே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை என்பது எவ்வளவு துயரமானது? இந்த விவகாரத்தை தில்லி காவல்துறை அமைதியாக வேடிக்கை பாா்த்தது அருவருக்கத்தக்கது. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, தில்லி அரசுகள் தப்ப முடியாது என்றுள்ளாா் அவா்.