தில்லி மெட்ரோ ரயிலின் மஞ்சள் வண்ண (யெல்லோ லைன்) ரயில்பாதையில் ஞாயிற்றுக்கிழமை பயணி ஒருவா் தண்டவாளத்தில் நின்ால் அப்பகுதியில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சமய்பூா் பத்லியிலிருந்து ஜிடிபி நகா் செல்லும் பாதையில் ஹைதா்பூா் பத்லிமோா் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் பயணி ஒருவா் நின்றுகொண்டிருந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. தில்லியில் உள்ளசமய்பூா் பத்லியையும் குா்கானிலுள்ள ஹூடா சிட்டி சென்டரையும் இணைக்கும் ரயில்பாதையாகும் இது.
பின்னா் அந்த நபரை வெளியேற்றிய பிறகு சுமாா் 15 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ சேவை தொடா்ந்தது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.