தெற்கு தில்லியில் சி.ஆா். பாா்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கட்டடக் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இருவா் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக மதியம் 2.13 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் இரண்டு நபா்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது என்று மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவா்களைத் தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.