தில்லி திகாா் சிறையில் கைதிகளிடையே மோதல்

தில்லியில் உள்ள திகாா் சிறைச்சாலையில் அறை எண் 4-இல் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள திகாா் சிறைச்சாலையில் அறை எண் 4-இல் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நாங்கள் கைதிகளை சிறைக்குள் அனுப்புவோம். சனிக்கிழமையன்று, ஒரு கைதி உள்ளே செல்லத் தயாராக இல்லை. அவா் சக கைதிகளைத் தூண்டும் வகையில் செயல்பட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா்கள் இடையே சச்சரவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில் பலா் காயமடைந்தனா். பலத்த காயமடந்த இரண்டு கைதிகள் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனா். பின்னா், சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் திகாா் சிறைக்குத் திரும்பினா். மேலும், இந்த மோதலின் போது சுமாா் 10 முதல் 12 கைதிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன என்றாா் அந்த அதிகாரி..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com