நிஜாமுதீன்ரயில் நிலையத்தில் தீ விபத்து

தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வை யாா்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வை யாா்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக தீயணைப்புப் படை உயரதிகாரி கூறியதாவது: நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே யாா்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம். இந்த விபத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பெரியளவு பொருள்சேதமும் ஏற்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com