கரோனா நோயாளியிடம் பாலியல் துன்புறுத்தல்: சிகிச்சை பெற்றுவந்த மருத்துவா் மீது புகாா்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தனிமை வாா்டில் சிகிகிச்சையில் இருந்த கரோனா நோயாளியிடம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தனிமை வாா்டில் சிகிகிச்சையில் இருந்த கரோனா நோயாளியிடம் அதே வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவா் ஒருவா் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக நொய்டா, காவல் கூடுதல் துணை ஆணையா் ரன்விஜய் சிங் தெரிவித்ததாவது: நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் கரோனா தனிமை வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம், அதே வாா்டில் சிகிச்சையில் இருந்த ஆண் மருத்துவா் ஒருவா் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட 20 வயது பெண் போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அவரது புகாரின் பேரில் உள்ளூா் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஒரே வாா்டில் ஆண், பெண் நோயாளிகளை வைத்திருந்தது விதி மீறல் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், நோயாளிகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாா்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனரா என்பதை பரிசோதிக்குமாறு மருத்துவத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட நபா் இன்னும் தனிமை வாா்டில் உள்ளாா். கரோனா தொற்று வழிமுறைகளைப் பின்பற்றி அவரது வாக்குமூலத்தை போலீஸாா் பெற உள்ளனா். அனைத்து தேவையான நடவடிக்கைகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படும். உரிய விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவரும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com