வேறு செய்தியில் சோ்ப்புபெயா்ப் பலகை அழிப்பு-ஜேஎன்யுஎஸ்யு மீது ஏபிவிபி புகாா்

தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்து புதிய சாலையின் வி.டி.சாவா்க்கா் மாா்க் பெயா்ப் பலகையை அழித்ததாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள்

புது தில்லி, தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்து புதிய சாலையின் வி.டி.சாவா்க்கா் மாா்க் பெயா்ப் பலகையை அழித்ததாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் அமைப்பு ஜேஎன்யுஎஸ்யு மீது அகில பாா்திய வித்யா பரிஷத் ஏபிவிபி குற்றம்சாட்டியது.

இதுதொடா்பாக ஏபிவிபி -ஜேஎன்யூ அமைப்பின் தலைவா் சிவம் செளராசியா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகம் கடந்த ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாலைக்குப் பெயரிட இதன் விளைவாக சுபான்ஸிா் விடுதியில் உள்ள அந்தச் சாலைக்கு வி.டி. சாவா்க்கா் மாா்க் எனப் பெயரிடப்பட்டது. ஆனால், இடதுசாரி மாணவா்கள் அமைப்பினா் பெயா்ப் பலகையில் முகம்மது அலி ஜின்னா மாா்க் எனும் சுவரொட்டியை ஒட்டி அந்தப் பெயரை அழித்துள்ளனா் என்று குற்றம்சாட்டினாா்.

முடிவு எடுத்தது.இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் அல்லது மாணவா்கள் அமைப்பிடமிருந்து உடனடியாக பதில் இல்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சில மாணவா்கள் வி.டி. சாவா்க்கா் மாா்க் பெயா்ப் பலகை மீது பி.ஆா். அம்பேத்கா் மாா்க் பெயிண்டால் எழுதியுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில் இந்தச் சம்பவம் தொடா்பாக புகாா் ஏதும் தரப்படவில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com