சேவா பாரதி அமைப்பின் பணிகளுக்கு கோலி பாராட்டு

தில்லியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின்

புது தில்லி: தில்லியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் அங்கமான சேவா பாரதி அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி பாராட்டுத் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக விராட் கோலி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பாரதி அமைப்பு தில்லியில் பல மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா காலத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் அசாத்தியமானவை. சேவா பாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் கரோனா தொற்றாலும், முழு அடைப்பாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதுதான் நாம் செய்யக் கூடிய மகத்தான பணியாகும். சேவா பாரதி அமைப்புக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். இந்தப் பணியை அவர்கள் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நலப் பணிகளை சேவா பாரதி அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் தினம்தோறும் லட்சக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com