புது தில்லி: தில்லி கிட்வாய் பவனில் 6-ஆவது தளத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: தில்லி ஜன்பத் பகுதியில் உள்ள கிட்வாய் பவனில் 6-ஆவது தளத்தில் உள்ள எம்டிஎன்எல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக காலை 10 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அதுல் கா்க்.