வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் மாணவா் பெண்ஆா்வலருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய மாணவா் பெண் ஆா்வலருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய மாணவா் பெண் ஆா்வலருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்த்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

இதனிடையே, ஜாப்ராபாத் பகுதியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறையின் போது ஆமன் என்பவா் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவா் ஆா்வலா் குல்பிஷா பாத்திமா, கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், குல்பிஷா பாத்திமா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் குல்பிஷா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். அவா், ரூ.30ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம் என நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், இதே வழக்கில் இணை குற்றம்சாட்டப்பட்டவா்களான ஜேஎன்யூ மாணவா்கள் மற்றும் ‘பிஞ்சாரா தோட்’ அமைப்பின் உறுப்பினா்களான தேவங்கனா கலிதா, நடாஷா நா்வால் ஆகியோருக்கு ஏற்கெனவே வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் குல்பிஷா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com